×

சமூகவலை தள பக்கத்தில் வாளுடன் புகைப்படம் வெளியிட்ட மூவர் கைது: களக்காடு அருகே பரபரப்பு

களக்காடு: களக்காடு அருகே கைகளில் வாளுடன் புகைப்படம் எடுத்து சமூகவலை பக்கத்தில் வெளியிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ஆனந்த கிருஷ்ணன் (18), வானமாமலை (27), மருதப்பர் கோயில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (18).

இவர்கள் மூவரும் சமூகவலைதளங்களில் கைகளில் பெரிய வாளுடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு, அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகங்களையும் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுசம்பந்தமாக களக்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர்.

The post சமூகவலை தள பக்கத்தில் வாளுடன் புகைப்படம் வெளியிட்ட மூவர் கைது: களக்காடு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Galakkadam ,Galagadam ,Galakadam ,
× RELATED ‘என்ன பேச்செல்லாம் கேட்க...