×

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு கடையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்த வைரமுத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை அந்த கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. பட்டாசு கடையில் தீபாவளி விற்பனைக்காக அதிகளவில் பட்டாசுகள் தயாரித்து கடையில் வைக்கப்பட்டு இருந்தன. பட்டாசு கடையில் அதிகளவில் பட்டசுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை பட்டாசு கடையில் 3 பேர் பணி ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது திடீரென உறைவு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விதிகளை மீறி பட்டாசு தயார் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு கடை விபத்தில் 2 பேர் கடையின் உள்ளே சிக்கிய நிலையில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறி வருவதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்தில் ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளன.

The post சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு கடையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Axillary ,Satur ,Virudhunagar ,Aprintalam ,Sattur, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...