×

ஆயுதங்களுடன் பதுங்கிய 5 வாலிபர்கள் கைது

 

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் எஸ்.ஐ. மோகன்லால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணி மேற்கொண்டனர். ராமையா தெரு பகுதியில் சென்ற போது, அங்கு சந்தேகப்படும்படி சிலர் பதுங்கியிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்து போது, அவர்கள், சோலையழகுபுரத்தை சேர்ந்த உமையா குமார்(எ)பெரிய எலி(23), அஜிஸ்(21), பாரதியார் ரோட்டைச் சேர்ந்த அருண்பாண்டி(23), ராமமூர்த்தி நகர் பிரகாஷ்(எ)சின்ன எலி(21), சோலைஅழகுபுரம் ஜீவானந்தம்(எ)சிவா(22) மற்றும் மாரிச் செல்வம் (26) என்பதும், இவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதயைடுத்து போலீசார் மாரிச்செல்வம் தவிர மற்ற 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 3 கத்திகள், மிளகாய்ப்பொடி பாக்கெட்டுகள் மற்றும் ரோப் கயிறு ரோல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்து ஓடி தலைமறைவான மாரிச்செல்வத்தை தேடி வருகின்றனர்.

The post ஆயுதங்களுடன் பதுங்கிய 5 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Jaihindpuram Police SI ,Mohanlal ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி