×

மாற்றுத்திறனாளிகள் தையல் எந்திரம் பெறுவதற்கான நேர்முக தேர்வு

 

திருப்பூர்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெறுவதற்கான நேர்முக தேர்வு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார். இதில் 90 பேர் கலந்துகொண்டனர். 64 பேர் தேர்வு செய்யப்பட்டனர். விரைவில் இவர்களுக்கு தையல் எந்திரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாற்றுத்திறனாளிகள் தையல் எந்திரம் பெறுவதற்கான நேர்முக தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...