×

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏவின் நண்பர் சுட்டுக் கொலை

வைஷாலி: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் பிதுபூர் பகுதியைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தீவிர தொண்டரும், மஹுவா எம்எல்ஏ முகேஷ் ரோஷனுக்கு மிகவும் நெருக்கமான நண்பரான கிரண் குமார் என்பவர் அவரது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த இருவர், அவரை அவரது வீட்டில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். திடீரென அவர்களில் ஒருவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கிரண் குமாரை சுட்டான். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது, கிரண் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த மக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் கிரண் குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த ஆர்ஜேடி எம்எல்ஏ முகேஷ் ரோஷன் சம்பவ இடத்திற்கு வந்து, கிரண் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீசார் கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

The post ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏவின் நண்பர் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Rashtriya Janata Dal ,MLA ,Vaishali ,Mahua ,Bidupur, Vaishali district ,Bihar ,Dinakaran ,
× RELATED வேலையில்லா திண்டாட்டம், கல்வி,...