×

மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியை சேர்ந்தவர் அமரன் (25), கள்ளச்சாராய வியாபாரி. இவர் புதுவை மாநிலத்திலிருந்து சாராயத்தை கடத்தி வந்து விற்றுள்ளார். இவர் விற்ற கள்ளச்சாராயத்தை எக்கியர்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த பலர் நேற்று முன்தினம் மாலை வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் சங்கர் (55), தரணிவேல் (50), ராஜமூர்த்தி (60), சுரேஷ் (60), மண்ணாங்கட்டி (47), சந்திரன் (61), மற்றொரு மண்ணாங்கட்டி (55) ஆகியோர் தங்களது வீடுகளுக்கு சென்று அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

அவர்களை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சங்கர், சுரேஷ் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து தரணிவேல், ராஜமூர்த்தி, மண்ணாங்கட்டி ஆகியோர் இறந்தனர். அதே பகுதியை சேர்ந்த 13 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மலர்விழி, விஜயன், சங்கர், சரத்குமார், கேசவவேலு, ஆபிரகாம், விஜயன், ராஜவேல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில், இன்று காலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் என்பவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

The post மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Marakkanam ,Viluppuram ,Amaran ,Wambamedu ,Marakkanam, Viluppuram district ,Marakavam ,Dinakaran ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...