×

உச்சிப்புளி, ஆர்.எஸ்.மடையில் நாளை மின்தடை

 

மண்டபம்: பெருங்குளம் துணை மின் நிலையம் கீழ நாகாச்சி மின்பாதை, ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையம் டவுன் -1 உயர் அழுத்த உயர் மின்பாதைகளில் நாளை (17ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உச்சிப்புளி, கீ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி.

எஸ்.கே.வலசை, சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, அண்ணா நகர், பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட், கேணிக்கரை. தாயுமானசுவாமி கோயில் தெரு, வண்டிக்காரத் தெரு, தங்கப்பா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் நகர், ஊரக உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன். செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

The post உச்சிப்புளி, ஆர்.எஸ்.மடையில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Uchipulli ,RS Matai ,Mandapam ,Nagachi ,Perungulam ,Dinakaran ,
× RELATED உச்சிப்புளி அரசு பண்ணையில் இரண்டு ரகத்தில் தென்னங்கன்று விற்பனை