×

வத்தலக்குண்டு அருகே மரத்தில் மோதியது அரசு பஸ் 10 பேர் காயம்

 

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே தெப்பத்துப்பட்டியிலிருந்து நேற்று அரசு பஸ் ஒன்று வத்தலக்குண்டு நோக்கி வந்து கொண்டிருந்தது. வத்தலக்குண்டு அருகே ராஜா நகர் என்ற இடத்தில் வந்த போது திடீரென பஸ் ஸ்டேரிங் ஆக்சில் உடைந்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த செம்மேட்டுப்பட்டியை சேர்ந்த அனுராதா, வடக்கு வலையபட்டியை சேர்ந்த ஆதம்மாள், சித்தரேவை சேர்ந்த நிதிஷ், வித்யா, பாலச்சந்திரன், கம்யூதிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயபாரதி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு முதலுதவிக்கு பின் அனைவரும் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பஸ் கண்டக்டர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post வத்தலக்குண்டு அருகே மரத்தில் மோதியது அரசு பஸ் 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Vathalakundu ,Vatthalakundu ,Theppathupatti ,Vattalakundu ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி