×

செங்கல்பட்டில் பரபரப்பு அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து: 10 பேர் கவலைக்கிடம்; டிரைவருக்கு வலை

செங்கல்பட்டு, மே 16: செங்கல்பட்டில் நேற்று அதிகாலை 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில், ஜிஎஸ்டி நெடுஞ்சாலையை ஒட்டி, புறவழிச்சாலையில் எல்லையம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே அபாயகர சாலை வளைவு உள்ளது. இவ்வழியே, செங்கல்பட்டு நகரப் பகுதிகளில் இருந்து வரும் பேருந்து, லாரி, வேன் போன்ற வாகனங்கள் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இந்த அபாயகர சாலை வளைவு அருகே புறவழி சாலை அமைந்துள்ளது. அபாயகரமான சாலை வளைவு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், புறவழி சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களை பார்க்க முடிவதில்லை.எனவே, இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பு போன்ற பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நேற்று அதிகாலை செங்கல்பட்டில் இருந்து, எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி, புறவழி சாலையில் வேகமாக திரும்பியது. இந்நிலையில்,டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னே சென்ற வேனின் மீது பயங்கரமாக மோதியது. அந்த வேன் முன்னால் அரசு பேருந்து மற்றும் கார் மீது வேகமாக மோதியது. அடுத்தடுத்து, 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவ்விபத்தில், பெரம்பலூரில் இருந்து தங்கள் உறவினரை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக வேனில் அழைத்து 10 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதை பார்த்த லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

வேனுக்குள் சிக்கியிருந்த 10 பேரையும் அரசு பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விபத்தில் சிக்கிய 4 வாகனங்களையும் அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக வேனில் அழைத்து சென்ற 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post செங்கல்பட்டில் பரபரப்பு அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து: 10 பேர் கவலைக்கிடம்; டிரைவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattal ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...