×

தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது

காஞ்சிபுரம், மே 16: காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (65). இவர், சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி நீலாவதி (55). இவர்களுக்கு அருளாளன் (37), யோகாநந்தம் (35) என 2 மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் அருளாளன் மனநோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை நீலாவதியின் வீட்டுக்கு சென்ற அக்கம்பக்கத்தினர் நீலாவதி ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நீலாவதியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், மூத்த மகன் அருளாளன் தாய் நீலாவதியிடம் சண்டையிட்டு, அவர் தூங்கும்போது தலையின் மீது அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொன்றது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அருளாளனை கைது செய்தனர்.

The post தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Hari Krishnan ,Vaiyavur ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...