×

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: இன்று நடக்கிறது

சென்னை: போரூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போரூர் கோட்டத்திற்கு உட்பட்ட செட்டியார் அகரம் ரோட்டில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.சி துணை மின்நிலைய வளாகத்தில் இன்று காலை 11 மணியளவில் செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Consumer ,Porur Fort ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு விற்பனை அங்காடி விற்பனையாளர் சஸ்பெண்ட்..!!