×

மீண்டும் பாலிவுட்டுக்கு சென்ற ஜோதிகா

சென்னை: ஜோதிகாக பாலிவுட்டில் ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் நடித்த அவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். சில வருட இடைவெளிக்கு பிறகு ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்ேபாது ‘காதல் தி கோர்’ என்ற மலையாள படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தேசிய விருது பெற்ற குயின், குட்பை படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கும் படத்தில் ஜோதிகாக நடிக்கிறார்.

அவருடன் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் ஜூன் மாதம் தொடங்கி மும்பை, லண்டனில் நடக்கிறது. 1998ஆம் ஆண்டு வெளியான ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற இந்தி படத்திற்கு பிறகு தற்போது இப்படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டுக்கு திரும்பியுள்ளார் ஜோதிகா. ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் மும்பையில் குடியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post மீண்டும் பாலிவுட்டுக்கு சென்ற ஜோதிகா appeared first on Dinakaran.

Tags : Astro ,Bollyweight ,Chennai ,Bollyout ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...