×

காதலியை சுட்டுக் கொன்று தலைமறைவான நிலையில் ‘பேஸ்புக்’ லைவில் துப்பாக்கியால் சுட்டு காதலன் தற்கொலை: ஜார்கண்ட்டில் பயங்கரம்

ராஞ்சி: ஜார்கண்ட்டில் காதலியை சுட்டுக் கொன்று தலைமறைவான காதலன், தற்போது பேஸ்புக் லைவில் வந்து தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் அர்கோரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட படேல் பூங்கா அருகே, கடந்த சில நாட்களுக்கு முன் காதலி நிவேதிதா என்பவரை அவரது காதலன் அங்கித் அஹிர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். நிவேதிதாவின் தலையில் ஒரு தோட்டாவும், அவரது மார்பில் 2 தோட்டாக்களும் பாய்ந்திருந்தது. இந்த சம்பவத்தில் நிவேதிதாவின் தோழி சிருஷ்டியும் காயமடைந்தார்.

நிவேதிதாவை சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்து அங்கித் அஹிர் தலைமறைவானார். கொலையாளி அங்கித் அஹிரை போலீசார் தேடி வந்த நிலையில், அயோத்தியாபுரியில் உள்ள பாழடைந்த வீட்டில் காதலி நிவேதிதாவை சுட்டுக் கொன்ற அங்கித் அஹிர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கித் அஹிரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘கடந்த நான்கு ஆண்டாக அங்கித் அஹிரும், நிவேதிதாவும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 2 மாதமாக நிவேதிதா, அங்கித் அஹிரிடம் பேசவில்லை. அவர்களுக்குள் என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தனது காதலி நிவேதாவை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்தார். நேற்று பேஸ்புக் லைவில் வந்து, அயோத்தியாபுரியில் உள்ள பாழடைந்த வீட்டில் அங்கித் அஹிர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

The post காதலியை சுட்டுக் கொன்று தலைமறைவான நிலையில் ‘பேஸ்புக்’ லைவில் துப்பாக்கியால் சுட்டு காதலன் தற்கொலை: ஜார்கண்ட்டில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,
× RELATED அமலாக்கத்துறை கைதை எதிர்த்து...