×

பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்-படகு சவாரி செய்து மகிழ்ச்சி

புவனகிரி : கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையம் களை கட்டியது. சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் அலையாத்தி காடுகள் உள்ளது. சுரபுன்னை தாவரங்களை கொண்ட இந்த காடுகளில் படகு சவாரி செய்வது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

இதற்காக சுற்றுலாத்துறை சார்பில் படகு இல்லம் உள்ளது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேலும் நேற்று வார விடுமுறை என்பதால் கூடுதலாக சுற்றுலா பயணிகள் இங்கு வந்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் படகு மற்றும் துடுப்பு படகுகளில் காட்டுப் பகுதிக்கு சென்று அலையாத்தி காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.மே மாதம் தொடங்கியதில் இருந்தே பிச்சாவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

The post பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்-படகு சவாரி செய்து மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bichavaram ,Bhubanagiri ,Pichavaram ,Chidambaram ,Dinakaran ,
× RELATED ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த...