×

50% அளவுக்கே முன்பதிவு.. இந்தியாவில் முதன்முறையாக பிலாஸ்பூர் – நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நிறுத்தம்!!

மும்பை : பயணிகள் வரவேற்பு குறைந்ததன் காரணமாக பிலாஸ்பூர் – நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட 6-வது வந்தே பாரத் ரயில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர்- மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இடையே இயக்கப்பட்டு. இந்த ரயில் சேவையை பிரமதர் மோடி கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி வைத்தார். பிலாஸ்பூர்-நாக்பூர் இடையே மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன்கொண்ட இந்த ரயிலில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த வந்தே பாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ.2,045-ம், கார் சேர் வகுப்பு கட்டணமாக ரூ.1,075-ம் நிர்ணயிக்கப்பட்டது.இந்த நிலையில், பிலாஸ்பூர் – நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வந்தே பாரத் ரயில் இவ்வாறு நிறுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை. 50% அளவுக்கே முன்பதிவு நடப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிறுத்தப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலானது செகந்திராபாத் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளது.அதே போல், பிலாஸ்பூர்- நாக்பூர் இடையே வந்தே பாரத் ரயிலுக்கு பதில் இனி தேஜஸ் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 50% அளவுக்கே முன்பதிவு.. இந்தியாவில் முதன்முறையாக பிலாஸ்பூர் – நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Tags : India ,Bilaspur-Nagpur ,Mumbai ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...