×

நாட்றம்பள்ளி அருகே சுற்றிச் திரியும் 2 காட்டு யானைகள்: குட்டையில் தேங்கிய நீரை பீய்ச்சி அடித்து உற்சாக குளியல்.. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி..!!

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே சுற்றிச் திரியும் 2 காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவக் குழு விரைந்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி வனப்பகுதி ஓரம் சுற்றித் திரிந்த 2 காட்டு யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு வெடித்து அடர் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. ஆனால் அவை ஆந்திரா எல்லையோரம் முகாமிட்டு அங்கு விவசாய தொழிலாளர்கள் இருவரை மிதித்து கொன்றது. அந்த ஆட்கொல்லி யானைகள் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சுற்றித் திரிகின்றன. அதிகாலை ரெட்டையூர் பகுதியில் திரிந்த யானைகளை கிராம மக்கள் விரட்டியடித்தனர்.

தற்போது ஏலகிரி மலையடிவாரத்தில் வாரகுட்டை, கோட்டூர் காட்டுப் பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன. வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வனப்பகுதி ஓரம் குட்டையில் தேங்கிய நீரை பீய்ச்சி அடித்து யானைகள் உற்சாக குளியல் போட்டனர். யானைகள் ஜலகாம்பாறை பகுதிக்கு செல்லக்கூடும் என்பதால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் 2 யானைகளையும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க சேலத்தில் இருந்து மருத்துவ குழு ஏலகிரி மலைப்பகுதிக்கு விரைந்துள்ளது.

The post நாட்றம்பள்ளி அருகே சுற்றிச் திரியும் 2 காட்டு யானைகள்: குட்டையில் தேங்கிய நீரை பீய்ச்சி அடித்து உற்சாக குளியல்.. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி..!! appeared first on Dinakaran.

Tags : Nadrampalli ,Tirupattur ,Natrampalli ,
× RELATED நாட்றம்பள்ளியில் தேசிய...