×

இன்ஜினீயர் தற்கொலை

 

கோவை: கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (57). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் பழனிவேல் (26). இவர் பிஇ படித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பழனிவேலை அவரது தந்தை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப கடன் வாங்கியிருந்தார். கொரோனா நோய் பரவல் காரணமாக, பழனிவேலால் வெளிநாடு செல்ல முடியவில்லை. இதனால் அவரது தந்தைக்கு பணம் இழப்பு ஏற்பட்டது. பழனிசாமி மீண்டும் தனது மகனை வேலைக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

பழனிவேல் தனது தந்தையின் கஷ்டத்தை நினைத்து கவலைப்பட்டார். தனது குடும்பத்தினரிடம் இது தொடர்பாக கூறி புலம்பியுள்ளார். சம்பத்தன்று பழனிசாமி அவரது மனைவி மற்றும் அவர்களது 2 மகன்களுடன் வெளியே சென்று விட்டனர். பழனிவேல் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். விரக்தியில் காணப்பட்ட பழனிவேல் விஷம் குடித்து இறந்தார். போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இன்ஜினீயர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Palaniswami ,Kurichi Housing Unit ,Dinakaran ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...