×

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

 

நாமக்கல்: நாமக்கல்லில் கஞ்சா வியபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.நாமக்கல் எஸ்ஐ செல்லத்துரை மற்றும் போலீசார், ராமாபுரம்புதூர் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.விசாரணையில், அவர்கள் எம்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ரூபன் (எ) தேவரூபன் (35), நாமக்கல் குட்டைமேலத்தெருவை சேர்ந்த சரவணன் (26) என்பதும், டூவீலரில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.

அவர்களிடம் இருந்த சாக்கு பையை போலீசார் சோதனை செய்தபோது, 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, ரூபன், சரவணனை போலீசார் கைது செய்தனர். இருவரும் கஞ்சாவை பொட்டலம் போட்டு, மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.

The post கஞ்சா கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,
× RELATED நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை!