×

கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

 

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின்பேரில், அதியமான்கோட்டை எஸ்ஐ விமல்குமார் தலைமையிலான போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருசன்கொட்டாய் வனப்பகுதி அருகே சென்றபோது, அங்கு சுற்றிக்கொண்டிருந்த நபர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். உடனே, போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி(55) என்பதும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சாராயம் காய்ச்சுவதற்காக அப்பகுதியில் போட்டிருந்த 500 லிட்டர் ஊறலை கைப்பற்றி அழித்தனர்.

The post கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nallampally ,Dharmapuri district ,SP ,Stephen Jesubadam ,Athiyamankot ,SI Vimalkumar ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...