×

கஞ்சா விற்ற 4 பேர் கைது

 

தர்மபுரி: அரூர் மதுவிலக்கு பிரிவு எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பொம்மிடி- மணலூர் சாலையில் குக்கல்மலை கூட்டுறவு சங்கம் அருகே, டூவீலரில் வந்தவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த குமார்(53) என்பதும், 500 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பெரும்பாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நாகாவதி அணை நஞ்சன்குழி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(63) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். பிடமனேரியில் கஞ்சா விற்ற மாதேஷ் மகன் ஹரிஹரன்(24) என்பவரை கைது செய்து, 200 கிராம் கஞ்சாவும், சந்தைபேட்டையில் சின்னசாமி(46) என்பவரை கைது செய்து 150 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Arur Prohibition Division ,SI ,SINIVASAN ,Pommidi- Manalore Road ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...