×

ரூ 3,000 லஞ்சம் பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த மங்களம் கீழ்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓவியர் வெற்றிவேல். இவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக மனைவி பரிமளா திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வெற்றிவேலிடம் மகளிர் போலீஸ் சிறப்பு எஸ்ஐ பரமேஸ்வரி ரூ3 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். அப்போது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், எஸ்எஸ்ஐ பரமேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

The post ரூ 3,000 லஞ்சம் பெண் எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Vetrivel ,Kilipalanandal, Mangalam ,Parimala ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...