×

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் சங்கம் பகுதியில் உள்ள அன்டான் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல் துறையினர் மீது தீவிராதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகளை பிடிக்க பதில் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Sri Nagar ,Jammu and ,Kashmir ,Anantnag district ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!