×

அண்ணாமலைக்கு நன்றி சொன்ன காங்கிரஸ்

பெங்களூரு: கர்நாடக காங்கிரசில் தேர்தல் வியூகங்களை வகுக்கும் வார் ரூம் பொறுப்பாளராக இருந்தவர் சசிகாந்த் செந்தில். கர்நாடக மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். இவர் வகுத்த தேர்தல் உத்திகளினால் கர்நாடகாவில் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த சசிகாந்த் செந்தில், அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவித்தார்.

‘‘கர்நாடகாவில் பா.ஜ. தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை இருந்ததால் காங்கிரசுக்கு கூடுதலாக 20 இடங்கள் கிடைத்துள்ளன. ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற மூத்த தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாக பேசி மாநில பா.ஜ.வை ஒழிக்கும் வேலையில் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டார். அண்ணாமலையை கர்நாடகாவுக்கு அழைத்து வரும் ஐடியாவை கொடுத்தவருக்கு நன்றி” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

The post அண்ணாமலைக்கு நன்றி சொன்ன காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,Annamalai ,Bengaluru ,Sasikanth Senthil ,Karnataka Congress ,IAS ,Karnataka ,Dinakaran ,
× RELATED ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா: அண்ணாமலை பரபரப்பு பேட்டி