×

திருநங்கையர் உட்பட 8 பேருக்கு அன்னையர் தின சிறப்பு விருது: ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்

சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு திருநங்கை உட்பட 8 தாய்மார்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருதினை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் அன்னையர் தின கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் பல துறைகளில் சாதித்த நபர்களின் தாய்மார்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருந்தினை வழங்கினர்.அதன்படி, செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவின் தாய் நாகலட்சுமி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தாயார் நாகமணி, ஹீனா(கிரேஸ் பானு திருநங்கை செயல்பாட்டாளர்) உள்ளிட்ட 8 தாய்மார்களுக்கு அன்னையர் தின விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது: தாய் இல்லாமல் நாம் யாரும் இல்லை. மொழி, கலாசாரம் கடந்து உலகம் முழுவதும் உள்ள அன்னையர் அனைவரும் ஒன்றே. மனிதனிடம் உள்ள உணர்வுகள் தாய் மூலம் மட்டுமே கிடைக்கின்றன. அந்த தாய் படித்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதனிடம் உள்ள அன்பு குணங்கள் தாய் மூலம் மட்டுமே வருகின்றன. வளர்ந்து வரும் உலகில் தற்போது உள்ள இளைஞர்கள் பெற்றோர்களை விட்டு விட்டு வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். தாயின் அன்பு அவர் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். ராஜ்பவன் இந்த விழாவால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது, அம்மாக்களிடம் இருந்து கற்று கொள்ளும் பாடம் மிகவும் சிறந்தது. பெண்களை, அன்னையர்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். என்று அம்மாவை இழக்கிறோமோ அன்றுதான் நமக்கு வயதாக தொடங்குகிறது. என்றார்.

 

The post திருநங்கையர் உட்பட 8 பேருக்கு அன்னையர் தின சிறப்பு விருது: ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Mother's Day ,Governor ,RN ,Ravi ,Chennai ,Tamil Nadu ,R.N. Ravi ,Day ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து