×

பரமத்திவேலூர் அருகே தொழிலாளர்கள் குடிசைக்கு தீ வைப்பு

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் காயமடைந்த 3 தொழிலாளர்களும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தங்கியிருந்த தொழிலாளர்களின் குடிசைகளுக்கு மர்மநபர்கள் தீவைத்தனர். தொழிலாளர்கள் குடிசைக்கு தீவைத்து தப்பியோடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

The post பரமத்திவேலூர் அருகே தொழிலாளர்கள் குடிசைக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Paramativelur ,NAMACKAL ,Jedarbalam ,Paramathivelur ,Karur ,Dinakaran ,
× RELATED 15 வயது சிறுமியை திருமணம் செய்து...