×

முத்துப்பேட்டையில் பைக் மோதி பெயிண்டர் பலி

 

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் நடந்து சென்ற பெயிண்டர் மீது பைக் மோதி பரிதாபமாக பலியானார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியை சேர்ந்தவர்வெங்கடேசன் மகன் கதிர்வேல் (80). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து நடந்து வந்துள்ளார். ரயில்வே கேட் அருகே வந்துக்கொண்டிருந்த போது, பழைய பஸ் நிலையத்திலிருந்து இரு வாலிபர்கள் வந்த பைக் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட கதிர்வேல் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கதிர்வேல் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ராமசாமி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் உயிரிழந்த கதிர்வேல் உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பைக்கில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முத்துப்பேட்டையில் பைக் மோதி பெயிண்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruppat ,Thiruppattu ,Thiruvarur District ,Muthupapettu Maruthangaveli ,Thiruppate ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்