×

அம்மாப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து மயிலாடுதுறையை சேர்ந்த 14 பேர் காயம்

 

தஞ்சாவூர்: அம்மாப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மயிலாடுதுறையை சேர்ந்த 14 பேர் காயமடைந்தனர். மயிலாடுதுறையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய 14 பேர் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சாலியமங்கலம் பகுதியில் உள்ள தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 14 பேரும் காயமடைந்தனர். தகவல் அறிந்தம் அம்மாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

The post அம்மாப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து மயிலாடுதுறையை சேர்ந்த 14 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Ammapettai ,Thanjavur ,Ammapet ,Thiruchendur ,Ammappettai ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...