×

மயிலாடுதுறை அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி படுகாயம்

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் ரவுடி படுகாயமடைந்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பண்டாரவாடை கிராமம் கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்.இவரது மகன் கலைவாணன் (40). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இரவு 8.30 மணியளவில் கலைவாணன் தனது வீட்டின் பின்புறம் நாட்டு வெடி குண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்தது. இதில் கலைவாணனின் பத்து விரல்களும் துண்டாகி உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பூர் போலீசார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கலைவாணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் குண்டு வீசியதால் கைகள் துண்டானது என கலைவாணன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவத்தின் உண்மை நிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கலைவாணன் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மயிலாடுதுறை அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Guthalam ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...