×

கலெக்டர் ஆய்வு ஜெயங்கொண்டம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற வாலிபர் கைது

 

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீசார் கல்லாத்தூர் தண்டலை பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லாத்தூர் ஏரிக்கரை அருகே ஒருவர் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு ஒருவர் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தரசு புதுத்தெருவை சேர்ந்த குமார் என்பவரது மகன் மதிவாணன் (27) என்பது தெரிய வந்தது இதையடுத்து மதிவாணனை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கலெக்டர் ஆய்வு ஜெயங்கொண்டம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Jayangkondam ,Ariyalur ,District ,Kalathur Thandalai ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில்...