×

போலீசாருடன் தகராறு குன்னூரில் 3 பேர் கைது

ஊட்டி, மே 14:குன்னூரில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக காமராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் காவலர் நடனசபாபதியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வண்டிச்சோலை பகுதியில் ஒரு கடையின் முன் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு மூன்று பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

பொது இடத்தில் ஏன் மது அருந்திக் கொண்டிருக்கிறீர்கள் என போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் மூவரும் தகாத வார்த்தைகள் பேசி தாக்க முயன்றனர். தொடர்ந்து, போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட லேம்ஸ்ராக் பகுதியை சேர்ந்த சரவணக்குமார், கரன்சி பகுதியை சேர்ந்த ரஞ்சன் மற்றும் வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த சுகுமாரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post போலீசாருடன் தகராறு குன்னூரில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Ooty ,Upper Coonoor Police Station… ,Dinakaran ,
× RELATED நீலகிரி அதிமுக அலுவலகம், வேட்பாளர் காரில் சோதனை