×

சாத்தான்குளம் தாலுகாவில் மே 16ம் தேதி முதல் ஜமாபந்தி தொடக்கம் கலெக்டர் மனுக்கள் பெறுகிறார்

சாத்தான்குளம், மே 14: சாத்தான்குளம் தாலுகாவில் ஜமாபந்தி முகாம் 16ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை 4நாள்கள் நடக்கிறது. இதில் ஜமாபந்தி அதிகாரியாக கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். சாத்தான்குளம் தாலுகாவில் 3குறுவட்டங்கள் அமைந்துள்ளன. இதற்கான தாலுகா பசலி 1432க்கான வருவாய் தீர்வாயம் தணிக்கை எனும் ஜமாபந்தி முகாம் 16ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை 4நாள்கள் நடக்கிறது. ஜமாபந்தி அதிகாரியாக மாவட்ட தீர்வாய அலுவலரும், கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்கிறார். தாலுகா அலுவலகத்தில் தினமும் காலை 10மணிக்கு இம்முகாமானது தொடங்குகிறது.

முதல் நாளான 16ம் தேதி வெங்கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குள்பட்ட மீரான்குளம், 1,2, வெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், கட்டாரிமங்கலம், பழங்குளம்ஆகிய கிராமத்துக்கும், 2ம் நாளான 17ம் தேதி வெங்கடேஸ்வரபுரம் குறுவட்டம் பிடானேரி, எழுவரைமுக்கி கிராமம், சாத்தான்குளம் குறு வட்டம் பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டிகுடியிருப்பு, புதுக்குளம், ஆகிய கிராமத்துக்கும், 3ம் நாளான 18ம் தேதி நெடுங்குளம், கோமானேரி, கொம்பன்குளம், தச்சமொழி ஆகிய கிராம மக்களுக்கும், பள்ளக்குறிச்சி குறு வட்டத்துக்குள்பட்ட முதலூர், பள்ளக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் ஆகிய கிராமத்துக்கும், 4ம் நாளான 19ம்தேதி கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, அரசூர் பகுதி 1, 2, திருப்பணி புத்தன்தருவை, படுக்கப்பத்து ஆகிய கிராம மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்படுகிறது. கிராம மக்கள் தங்களது நிறைவேறாக நீண்ட கால மனுக்கள், பிரச்னைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கேட்டும் விண்ணப்பிக்கலாம். முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தெரிவித்துள்ளார்.

The post சாத்தான்குளம் தாலுகாவில் மே 16ம் தேதி முதல் ஜமாபந்தி தொடக்கம் கலெக்டர் மனுக்கள் பெறுகிறார் appeared first on Dinakaran.

Tags : Chatankulam taluk ,Jamabandhi ,Chatankulam ,Jamabandi ,
× RELATED கனிமொழி பற்றி அவதூறு: பாஜ பிரமுகர் கைது