×

அடித்து துன்புறுத்துவதாக மனைவி புகார்: கணவனிடம் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது

திருவண்ணாமலை: அடித்து துன்புறுத்துவதாக மனைவி கொடுத்த புகாரில் கைது செய்யாமல் இருக்க கணவனிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை அடுத்த மங்களம் கீழ்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், ஓவியர். இவரது மனைவி பரிமளா. 2 மகன்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேலுக்கும், அவரது மனைவி பரிமளாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. தன்னை அடித்து துன்புறுத்துவதாக கணவன் மீது, கடந்த 9ம் தேதி திருவண்ணாமலை மகளிர் போலீசில் பரிமளா புகார் அளித்தார்.

இதற்காக ஓவியர் வெற்றிவேலை விசாரணைக்கு அழைத்த மகளிர் போலீஸ் சிறப்பு எஸ்ஐ பரமேஸ்வரி, கைது செய்யாமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். புகாரின்பேரில், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் தந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று சிறப்பு எஸ்ஐ பரமேஸ்வரியிடம் ஓவியர் வெற்றிவேல் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அடித்து துன்புறுத்துவதாக மனைவி புகார்: கணவனிடம் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...