×

மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம் புதூரை சேர்ந்த நடராஜன் என்பவரது தோட்டத்தை அதே ஊரை சேர்ந்த தர்மர் குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டுள்ளார். அருகிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து பயிர்களை சேதப்படுத்தியதால், தர்மர் தோட்டத்திற்கு மின்வேலி அமைத்தாக கூறப்படுகிறது.

அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் ஆசைப்பாண்டி (35), மணி (70) ஆகியோர் 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று தர்மர் ேதாட்டத்தில் இருந்து அழுகிய வாடை வந்துள்ளது. அப்பகுதியினர் சென்று பார்த்த ேபாது ஆசைப்பாண்டி, மணி ஆகியோர் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. உசிலம்பட்டி தாலுகா போலீசார் இதுகுறித்து தர்மரிடம் விசாரித்து வருகின்றனர்.

The post மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Uzilimbatti ,Madurai district ,Ambasamudram Pudur ,Natarajan ,Dinakaran ,
× RELATED கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை...