×

எல்லை மீறிய விமர்சனம் வழக்கு தொடர பிருத்விராஜ் முடிவு

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் வெளிநாட்டு கருப்பு பணம் புழங்குவதாக தகவல்கள் வந்ததை தொடர்ந்து, அமலாக்க துறையினர் 4 திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் நடத்திய திடீர் சோதனையில் மலையாள திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரிடம் இருந்து அமலாக்கத்துறை 25 கோடிரூபாய் அபராதம் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களை வெளியிட்ட சில மலையாள ஊடகங்கள் மற்றும் யு டியூப் சேனல்கள் 25 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியது நடிகர் பிருத்விராஜ் என்று அவரது படத்துடன் செய்தி வெளியிட்டன.

இது மலையாள சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பிருத்விராஜ் தனது இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். ‘பொதுவாக இம்மாதிரியான செய்திகளை நான் கடந்து செல்வதே வழக்கம். ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டு. வரம்பு மீறிய இந்த அபாண்ட செய்திக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளை தொடங்குவேன்” என கூறியுள்ளார்.

The post எல்லை மீறிய விமர்சனம் வழக்கு தொடர பிருத்விராஜ் முடிவு appeared first on Dinakaran.

Tags : Bhirudwiraj ,Thiruvananthapuram ,Brudwiraj ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...