×

காங்கிரசின் வெற்றி மக்களின் வெற்றி; கண்ணீர் மல்க டி.கே.சிவகுமார் உருக்கம்

பெங்களூரு: சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி மக்களின் வெற்றி ஆகும் என மாநில காங்.,தலைவர் டிகேசிவகுமார் கண்ணீருடன் உருக்கமாக கூறினார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியில் நிருபர்களிடம் கூறியதாவது:- கனகபுரா தொகுதி மக்கள் மிகப்பெரிய வெற்றியை எனக்கு அளித்துள்ளனர். 1.22 லட்சம் வாக்குகள் அளித்து வெற்றி அளித்துள்ளனர். வரலாற்று வெற்றி அளித்த தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள வெற்றி மக்களின் வெற்றி ஆகும். ஆட்சி அமைப்பது, முதல்வர் யார், அமைச்சர் யார் என்பது மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட்ட நிர்வாகிகள், பூத் அளவிலான தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

கர்நாடகாவை நான் காப்பாற்றுவேன் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு உறுதியளித்தேன். டெல்லி சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்த போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்னை வந்து சந்தித்தது என்னால் மறக்க முடியாது என்று கண்ணீருடன் குரல் தழுதழுக்க உருக்கமாக பேசினார். சோனியா காந்திக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் என் மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸ் தலைவர் பதவி அளித்தார். அன்று முதல் நான் தூங்கவில்லை. அதே போன்று காங்கிரஸ் வெற்றிக்கு உழைத்த சித்தராமையா உட்பட அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post காங்கிரசின் வெற்றி மக்களின் வெற்றி; கண்ணீர் மல்க டி.கே.சிவகுமார் உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Malka D. K.K. Sivagamar ,Bengaluru ,DKZIVUAMAR ,Malka D. K.K. Sivamar ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...