×

கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் கொடுத்த இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்: மூத்த தலைவர் எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் கொடுத்த இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவின் வெற்றிக்காக கடந்த 4 மாதங்களாக ஒரு நாள்கூட ஓய்வில்லாமல் உழைத்தேன். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபடும். பாஜக தொண்டர்கள் கலக்கமடைய வேண்டாம் என்று கூறினார்.

The post கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் கொடுத்த இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்: மூத்த தலைவர் எடியூரப்பா பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,Yeddyurappa ,Bengaluru ,Dinakaran ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...