×

வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

சிவகாசி, மே 13: சிவகாசியில் கட்டளைபட்டி சாலை மிகவும் முக்கியமான சாலையாக திகழ்ந்து வருகின்றது. சிவகாசி நகரில் காலை மற்றும் மாலை வேளையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இரட்டை பாலத்திலிருந்து கட்டளைபட்டி சாலை வழியாக போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலை 8 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தொடர்ந்து இதே சாலையில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கண்மாய் கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. புதிய சாலை, தடுப்புச்சுவர் தரமாக அமைக்கப்படாததால் சாலை, தடுப்புச்சுவர் அமைக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே சேதம் அடைந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது இந்த சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகின்றது.

ஆங்காங்கே பெரும் பள்ளங்களாக காட்சியளிக்கின்றது. தற்போது பெய்து வரும் மழையால் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதால் நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. புதிய சாலை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Command Road ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை