×

நூலகத்தில் கோடைகால சிறப்பு முகாம்

திருப்புத்தூர், மே 13: திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் கோடைகால சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். எழுத்தாளர் முத்துலிங்கம் எழுதிய ”அமெரிக்காக்காரி” என்னும் நாவல் பற்றியும், கவிஞர் ஆசை எழுதிய “கொண்டாலத்தி” எனும் கவிதை மற்றும் பல புத்தகங்கள் குறித்தும் கல்யாண கண்ணன் பேசினார். ஆசிரியர் சேவகமூர்த்தி, கவிஞர் லட்சுமி, ஆசிரியர் சுவாமிநாதன், செல்வ ஆனந்த், பேராசிரியர் கோபிநாத் ஆகியோர் பேசினர். நிறைவாக நாராயணன் நன்றி கூறினார்.

 

The post நூலகத்தில் கோடைகால சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Perarinjar Anna Branch Library ,Dinakaran ,
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்