×

அரிவாள் வெட்டு 7 :பேர் மீது வழக்கு

பேரையூர், மே 13: பேரையூர் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கோபால். இவருக்கும் இதே ஊரை சேர்ந்த பாக்கியராஜ், பெருமாள், வெங்கடேஷ், புல்லட், மகாராஜா, கவாஸ், சிவசக்தி, ஆகியோருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இவர்கள் 7 பேரும் நேற்று கோபால் வீட்டிற்கு சென்று பட்டாக்கத்தி, அரிவாள், உள்ளிட்ட ஆயுதங்களுடன் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியதுடன், அவரையும் வெட்டியுள்ளனர்.

இதில் காயமடைந்த கோபால் சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி வைரலட்சுமி அளித்த புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post அரிவாள் வெட்டு 7 :பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Gopal ,Damkarapatti ,Bhakyaraj ,Perumal ,Venkatesh ,
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து