×

காரைக்காலில் விளைநிலங்களை சேதப்படுத்திய பன்றிகள் துரத்தி துரத்தி பிடிப்பு-குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்

காரைக்கால் : காரைக்காலில் விளைநிலங்களை சேதப்படுத்திய பன்றிகளை துரத்தி துரத்தி பிடித்து குண்டு கட்டாக தூக்கி வண்டியில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.காரைக்காலில் கடந்த வாரம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்களது விளைநிலத்தை பன்றிகள் சேதப்படுத்துவதாகவும், பன்றிகள் வளர்ப்பை முறைப்படுத்தவும், விவசாயப் பகுதிகள், குடியிருப்புப் பகுதிகளில் திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில், காரைக்கால் நகராட்சி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் விளைநிலப்பரப்பில் திரிந்த பன்றிகளை பிடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் கீழகாசாக்குடி, தலத்தெரு, அம்மன்கோயில் பத்து, கருக்களாச்சேரி, அக்கரைவட்டம், ஓடுதுறை, நேருநகர், தர்மபுரம், உத்தரங்குடி ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த 129 பன்றிகளை துரத்தி துரத்தி பிடிக்கப்பட்டு குண்டு கட்டாக தூக்கி வண்டியில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் பன்றிகள் அப்புறப்படுத்தும் பணிகள் மாதந்தோறும் 2 முறை நடைபெறும் என அதிகாரிகள் கூறினர்.

இத்குறித்து விவசாயிகள் கூறுகையில், மாவட்ட கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் நகர பகுதிகளில் நடைபெறும் பன்றிகள் பிடிக்கும் இந்த பணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளிலும், விவசாய பகுதிகளில் நடைபெற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

The post காரைக்காலில் விளைநிலங்களை சேதப்படுத்திய பன்றிகள் துரத்தி துரத்தி பிடிப்பு-குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர் appeared first on Dinakaran.

Tags : Karichakal ,Karaikal ,Karaickal ,Dinakaran ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...