×

திருவாரூர் மாவட்டத்தில் கோடை மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கெடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கோடை மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த பயிர்களை திங்கட்கிழமை முதல் கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு திருவாரூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வேளாண்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சுமார் 20,000 ஏக்கர் பருத்தி, 5000 ஏக்கர் எள் சேதமடைந்துள்ளது.

The post திருவாரூர் மாவட்டத்தில் கோடை மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கெடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி