×

அனுமதியின்றி மணல் ஏற்றிய லாரி பறிமுதல்

பரமத்திவேலூர், மே 12: பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பாலம் சோதனை சாவடி அருகில், நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் (தெற்கு) முருகன் தலைமையில் அலுவலர்கள் நேற்று வாகன சோதனை மேற்கொண்டார். அப்ேபாது அவ்வழியாக வந்த லாரிகள் தார்பாய் போட்டு மூடாமல் மணல் ஏற்றி வந்தது. 5 லாரிகள் மீது சிறப்பு தனிக்கை செய்யப்பட்டு தலா ₹1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தார்பாய் போடாமலும், அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த லாரிக்கு ₹20 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரி, லாரி பறிமுதல் செய்து பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்திவைத்தார். தொடர்ந்து அவ்வழியாக விதிமீறி இயக்கப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

The post அனுமதியின்றி மணல் ஏற்றிய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Paramathivellur ,Cauvery river ,Namakkal District Transport ,Officer ,South ,Murugan ,Dinakaran ,
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை