×

வனஅதிகாரியை டம்மி துப்பாக்கியால் மிரட்டியவர் கைது

மதுரை, மே 12: மதுரை புதூர் கற்பகம் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (65), ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. இவரது வீட்டு வாசல் முன்பு சம்பவத்தன்று கே.கே.நகரை சேர்ந்த மித்ரன் என்பவர் தனது காரை நிறுத்தியிருந்தார். இதனால் காரை வேறு பகுதியில் நிறுத்துமாறு வெற்றிவேல் கூறினார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மித்ரன், வெற்றிவேலை தாக்கி டம்மி துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து வெற்றிவேல் அளித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மித்ரனை கைது செய்தனர்.

The post வனஅதிகாரியை டம்மி துப்பாக்கியால் மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vetrivel ,Pudur Karpagam, Madurai ,
× RELATED கிணற்றில் விழுந்த மயில் மீட்பு