கீழக்கரை, மே 12: பெரியபட்டினம் ஊராட்சியில் கிராம மக்கள் வழங்கிய இடத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரேஷன் கடை கட்டிடம் கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடந்தது. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் தெற்கு புதுகுடியிருப்பு கிராமத்தில் ரேஷன் கடை வாடகை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு அரசு சார்பில் சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இக்கோரிக்கையை ஏற்று கட்டிடம் கட்ட ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்து பரிந்துரைத்தார். இதையடுத்து, தெற்கு புதுகுடியிருப்பு பொதுமக்கள் வழங்கிய இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது. திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் அக்பர்ஜான் பீவி, மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் அன்சார் அலி, ஒன்றிய துணை செயலாளர் பஷீர் முஹமது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முஹமது அபிபுல்லா, கிராமத்தலைவர் பாலு, ஊராட்சி வார்டு உறுப்பினர் நாகலட்சுமி, திமுக கிளை செயலாளர்கள் கருப்பையா, முத்து கிருஷ்ணன், நஜிபுதீன், கருப்பையா உள்பட பலர் பங்கேற்றனர்.
The post ரேஷன் கடை கட்டுவதற்கு பூமிபூஜை appeared first on Dinakaran.