×

வீரராகவபெருமாள் கோவில் தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர்,மே12: திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா வருகிற ஜூன் 2 மற்றும் 3ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மாவட்ட வளர்ச்சி குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், செயல் அதிகாரி சரவணபவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்த்திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக நடத்துவது, திருவிழா நடக்கும் 13 நாட்களும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, தேரோட்டத்துக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று விஸ்வேஸ்வரர், வீரராகபெருமாள் கோவில் வளாகத்தில் முகூர்த்த கால் நடப்பட்டது.

The post வீரராகவபெருமாள் கோவில் தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Veeraragavaperumal temple ,day ,Tirupur ,Viswesvaraswamy ,Veeraragava Perumal Temple Vaikasi Visakha Chariot Festival ,Veeraragavaperumal Temple Chariot Festival ,
× RELATED நெடுஞ்சாலைத்துறை சார்பில்...