×

குழந்தையுடன் பெண் மாயம்

கோவை மே 12: கோவை ராமநாதபுரம் மருதாச்சலம் வீதியை சேர்ந்தவர் தியாகராஜன். கூலி தொழிலாளி. இவர் மனைவி ரேவதி (25). இவர்களுக்கு 2 வயதில் கோகுல் பிரசாத் என்ற மகன் உள்ளார். குடும்ப பிரச்னையால் கணவர், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரேவதி தனது குழந்தையுடன் சுகுணாபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அவர் அங்கே செல்லவில்லை என தெரிகிறது. குழந்தையுடன் இவர் மாயமாய் விட்டதாக கணவர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

The post குழந்தையுடன் பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Thiagarajan ,Marudachalam Road, ,Ramanathapuram, Coimbatore ,Revathi ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...