×

குடவாசல் கிளை நூலகத்திற்கு சாலை, கட்டிட வசதி வேண்டும்

வலங்கைமான், மே12: குடவாசல் கிளை நூலகம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முழு நேர நூலகமாக இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புரவலராகவும், 6 ஆரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இங்கு தினமும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த நூலகத்தில் போதுமான இடவசதி இல்லை. இதனால் வாசகர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நூலக கட்டிடம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு கட்டிடம் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது.

அருகில் இருக்கும் மற்றொரு கட்டிடத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் அக்கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது. நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்க போதிய இட வசதி இல்லை. மேலும் நூலகத்திற்கு சாலை வசதி இல்லாததால் குறுகலான பகுதியில் வாகனங்களை திருப்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். மழை நேரங்களில் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் நூலகத்திற்கு வாசகர்கள் வந்து செல்ல முடியாத நிலையில் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த பழைய நூலகத்தை இடித்துவிட்டு புதிய நூலக கட்டிடம் கட்டித்தரவும் , போதிய சாலை வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குடவாசல் கிளை நூலகத்திற்கு சாலை, கட்டிட வசதி வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Gudavasal branch ,Walangaiman ,Gudavasal Branch Library ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...