வலங்கைமான், மே12: வலங்கைமான் அருகேயுள்ள வேலங்குடி ஊராட்சி தென்கரை ஆலத்தூர் கழுங்கடி தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் துர்கா (17). இவர் அதேபகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த இரு வீட்டாரும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த துர்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து துர்காவின் உடலை மீட்டு உடல் பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.