×

பிறந்த நாளில் லாரியில் சிக்கி சிறுவன் பலி

வேலூர், மே 12: வேலூர் அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்தவர் ரகுராமன். இவரது மகன்கள் திலீபன்(10), குகன்(8). நேற்று குகனுக்கு பிறந்தநாள். இந்நிலையில் ரகுராமன் நேற்று முன்தினம் மகன்கள் 2 பேரையும் பைக்கில் அழைத்துச்சென்று அல்லிவரம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் விட்டார். அங்கிருந்து அவரது தாத்தா தனபால் என்பவர் திலீபன், குகன் ஆகிய 2 பேரையும் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் உள்ள தாய்மாமா வீட்டிற்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவ்வழியாக வந்த லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இடதுபுறமாக விழுந்த சிறுவன் குகன் மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். வலதுபுறமாக விழுந்த தனபால், திலீபன் ஆகியோர் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். சிறுவன் பிறந்த நாளன்று இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பிறந்த நாளில் லாரியில் சிக்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Raguraman ,Nelwai ,Dileepan ,Gugan ,
× RELATED நிலத்தை அளக்க எதிர்ப்பு டூவீலருக்கு தீ வைப்பு