×

நிதிஷ்குமாரின் நெருங்கிய நண்பர் ஆர்சிபி சிங் பாஜவில் இணைந்தார்

புதுடெல்லி: முன்னாள் ஐக்கிய ஜனதா தள தலைவர் ஆர்சிபி சிங் நேற்று பாஜவில் இணைந்தார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் ஆர்சிபி சிங். கடந்த ஆண்டு முதல்வர் நிதிஷூடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் அவர் பாஜவுடன் நெருக்கமாக செல்வதாகவும் புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து திடீரென விலகினார். இதனை தொடர்ந்து அவர் நேற்று பாஜவில் இணைந்தார். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஆர்சிபி சிங் பாஜவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பின்னர் பேசிய ஆர்சிபி சிங்,‘‘பதவி நாற்காலி மேல் கொண்ட விருப்பத்தின் காரணமாக குற்றங்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளார். பீகாரில் அவர் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுவார். அவர் யூ டர்ன் எடுத்துக்கொண்டிருக்கும் நபர். பீகாரில் வளர்ச்சிக்காக நிதிஷ்குமாருக்கு கட்டளையிடப்பட்டது. ஆனால் அவர் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார்” என்றார்.

The post நிதிஷ்குமாரின் நெருங்கிய நண்பர் ஆர்சிபி சிங் பாஜவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,RCB Singh ,BJP ,New Delhi ,United Janata Dal ,Chief Minister ,Bihar ,Dinakaran ,
× RELATED இதுபோல் ஆட்டத்தை தொடர விரும்புகிறேன்: ஆட்டநாயகன் நிதிஷ்குமார் பேட்டி